Wednesday, March 7, 2012

'கோகுலம் வாசகர் வட்டம்' ; ஓர் அறிமுகம்


'கோகுலம் வாசகர் வட்டம்' என்பது எங்களது ஒரு சிறிய முயற்சி.

வாசிப்புப் பழக்கத்தினை இளையவர்கள் மத்தியில் மீண்டும் முளைக்கச் செய்வதற்கான சிறு விதை.

இன்றைய 'நவீன' உலகம் என்று சொல்லப்படுகிற நவநாகரிக உலகில் வாசிப்பு என்பது ஏதோ ஒதுக்கப்படவேண்டிய - பிற்போக்குத்தனமான செயற்பாடு என்ற நிலை இளையவர்கள் மத்தியில் விஷமாக விதைக்கப்பட்டுவருகிறது.

இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி, வாசிப்புப் பழக்கத்தை இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து முற்றாக நீக்கிவிடும் ஒரு 'நல்ல'! காரியத்தை தன்னையறியாமலேயே செய்துவருகிறது.

எனவே, எம்மால் இயன்ற அளவு, வாசிப்புப் பழக்கத்தை எமது இளைய தலைமுறை மத்தியில் நிலைக்கச் செய்வதற்கு முயற்சி செய்வோம் என்ற எண்ணக்கருவில் இந்த 'கோகுலம் வாசகர் வட்டம்' என்னும் அமைப்பினை உருவாக்கியிருக்கிறோம்.

வாசிப்புப் பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் இதன் அங்கத்தவர்களே! எனவே, இந்த வலைப்பூவின் முதல் பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் எங்களது 'கோகுலம் வாசகர் வட்டத்தின்' அங்கத்தவராகியிருக்கிறீர்கள்.

உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

வாருங்கள்; எங்கள் மத்தியிலிருந்து வெகு வேகமாக விலகிச் சென்றுகொண்டிருக்கும் வாசிப்புப் பழக்கத்தை இழுத்துப்பிடித்து நிலைபெறச் செய்வோம்!